puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 18 பிப்ரவரி, 2013

பல மில்லியன் பெறுமதி துப்பாக்கிகளை இலங்கை அரசுக்கு வழங்கியது பிரித்தானியா!



on 18 February 2013.
சிறிலங்காவில் மோசமான மனித உரிமைமீறல்கள் இடம்பெற்றததையும் பொருட்படுத்தாது மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பிரித்தானியா கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளதாக, பிரித்தானியாவின் The Independent நாளேடு குற்றம்சாட்டியுள்ளது.

அரசாங்கப் புள்ளிவிபரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, குறைந்தது £3 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்கள் கொழும்புக்கு விற்கப்பட்டுள்ளது. இதில் கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத உடற்கவசங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளடங்குகின்றன.



மனித உரிமை மீறல்கள் காரணமாக, கவலைக்குரிய நாடாக சிறிலங்காவை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பட்டியலிட்டுள்ள போதிலும் இந்த ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளன என்றும், பிரித்தானியாவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட, கடந்த ஜுலை தொடக்கம் செப்ரெம்பர் வரையிலான காலாண்டுத் தரவுகளில் இருந்தே சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது என்றும் அற்த நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.

 

இதன்படி சிறிலங்காவுக்கு £3'741 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஏற்றுமதிக்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது. இதில் 3 மில்லியின் பவுண்ட்ஸ் இராணுவ தளபாடங்களாகும். 2 மில்லியன் பெறுமதியான விற்பனை, 'ML1' என்ற அடையாளத்தின் கீழ், சிறிய ஆயுதங்கள், என்ற வகைக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஜுலையில் ஒரு தடவையும், ஓகஸ்ட் மாதம் மூன்று தடவைகளும் என நான்கு சந்தர்ப்பங்களில் இந்த ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 600 தாக்குதல் துப்பாக்கிகள், 650 துப்பாக்கிகள், 100 கைத்துப்பாக்கிகள், 50 தாக்குதல் சொட் கண்கள், என்பனவற்றை விற்க பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


அத்துடன் சிறிலங்காவுக்கு 330,000 பவுண்ட்ஸ் பெறுமதியான வெடிபொருட்களையும், 665,000 பவுண்ட்ஸ் பெறுமதியான குண்டு துளைக்காத உடற்கவசங்களையும் விற்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2008 தொடக்கம் 2012 ஜுன் வரையில், சிறிலங்காவுக்கு 12 மில்லியன் பவுண்டஸ் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News : Source

eutamilar. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக