puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 18 பிப்ரவரி, 2013

தமுமுக -ம ம க புதிய கிளை திறப்பு விழா - மத்திய அரசை கண்டித்து கண்டன கூட்டம்


Monday, 18 February 2013 17:13 administrator

E-mail Print PDF
குவைத் தமுமுக -ம ம க மண்டலத்தின் மிர்காப் பகுதியில் புதிய கிளை திறப்பு விழாவும் ,
அப்சல் குருவை அநியாயமாக தூக்கிலிட்ட நயவஞ்சக (காங்கிரஸ்)மத்திய அரசை கண்டித்து
கண்டன கூட்டமும் இன்று (15 .02 .2013) வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு மிர்காப்
சிட்டியில் தஞ்சை உணவகத்தில் வைத்து மண்டல செயலாளர் முஜிப் ரகுமான் அவர்கள் தலைமையில்
நடந்தது


நிகழ்ச்சியை துவங்கும் விதமாக மொவுலவி ஹாபிஸ் அப்துல் மாலிக் பைஜி அவர்கள் தனது இனிய குரலில்
இறைவசனம் ஓதினார் ,உலாமாக்கள் அணி செயலாளர் ஆயங்குடி சலீம் ரப்பானியின் தொகுப்புரை வழங்கினார்

சோதனைகளை சாதனைகளாக்கிய தமுமுக என்ற தலைப்பில் மண்டல செயலாளர் பெருங்லூர் முஜிப் ரகுமான் தலைமையுரையாற்றினார்

தொழுகையின் முக்கிய துவம் என்ற தலைப்பில் மொவுலவி பைசுர் ரகுமான் பைஜி அவர்கள் பேசினார்கள்

இஸ்லாமிய அரசியல் என்ற தலைப்பில் மொவுலவி ஹஜ் முகமது சலாஹி அவர்கள் பேசினார்கள்

சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை இந்து துவத்தின் செயல் பாடுகள் என்ற தலைப்பில் மிஸ்ரிப் கிளை தலைவர் எருமப்பட்டி கமர்தீன் அவர்கள் பேசினார்கள்


புதிய மிர்காப் கிளைக்கு கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
தலைவர் ;ஆயங்குடி சகோ;ஜியாவுதீன்
செயலாளர் ;ஆயங்குடி சகோ;ஹஜ் முகமது
பொருளாளர் ;ஆயங்குடி சகோ;ஹலில் அகமது
துணை தலைவர் ;ஆயங்குடி சகோ;அசன் அலி
துணை செயலாளர் ;ஆயங்குடி சகோ;அபுல் ஹுசைன்

ஆலோசகர்களாக ;
நெல்லை பீர் மரைக்காயர் , பாண்டிசேரி அலாவுதீன்
பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தூம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

சகோதரர் அப்சல் குருவை அநியாயமாக தூக்கிலிட்ட நயவஞ்சக (காங்கிரஸ்)மத்திய அரசை
கண்டித்து நடந்த கண்டன கூட்டத்தில் மக்கள் தொடர்பு & மீடியா செயலாளர் சகோ; நெல்லை
பீர் மரைக்காயர் மற்றும் இந்திய தவுகித் ஜமாஅத் பொது செயலளர் சகோ ;முகவை அப்பாஸ்
ஆகியோர் தங்களது கண்டனத்தை வலிமையாக தெரிவித்தனர்

விருதுநகர் மாவட்ட முன்னால் தமுமுக துணை தலைவர் சம்சுதீன் அவர்கள் மண்டல தலைவர்
பேராசிரியர் தாஜ்தீன் அவர்கள் முன்னிலையில் குவைத் தமுமுக -ம ம க வோடு இணைத்துக்
கொண்டு தமிழகத்தில் செயல் பட்டது போன்று சிறப்பாக செயல் படுவதாக வாக்குறுதி அளித்தார்

கைதான் கிளை தலைவர் பரங்கிப் பேட்டை ஹாஜா மக்தூம் அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம்
இனிதே முடிவு பெற்றது

கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோர் மார்க்க ,அரசியல் குறித்தும்,மற்றும் சகோதரர் அப்சல் குரு
விசயமாகவும் உண்மை நிலை அறிந்து சென்றனர் மிக சிறிய மாநாடு போல நிகழ்ச்சி நடந்தது என கலந்து
கொண்ட மக்கள் கருத்து தெரிவித்தனர்

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக