puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி மீதான வழக்கை விரைந்து முடித்து தண்டனை வழங்க வேண்டும்!


மீதான வழக்கை விரைந்து முடித்து தண்டனை வழங்க வேண்டும்!

Tuesday, 12 February 2013 19:13

E-mail Print PDF
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:

காரைக்காலைச் சேர்ந்த பெண் இன்ஜீனியர் வினோதினி உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தனக்கு கிடைக்காத ஒரு பெண் உயிரோடு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் சுரேஷ் என்ற மனித மிருகம் நடத்திய ஆசிட் வீச்சால் அந்த அப்பாவிப் பெண் சுமார் மூன்று மாதங்களாக மரண வேதனை அடைந்து இன்று உயிர் இழந்துள்ளார்.
வினோதினியின் மரணத்திற்கு காரணமான அந்த மனித மிருகம் சுரேஷிற்கு, அந்தப் பெண் வேதனை அடைந்ததைப் போலவே ஆசிட் வீசி கொல்ல வேண்டும் என்று நாம் விரும்பினாலும், இந்தியச் சட்டங்களில் அதற்கு இடமில்லை. எனவே சட்டங்களைத் திருத்தி, இதுபோன்ற மனித மிருகங்களுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும்.
இந்த வழக்கில், சுரேஷிற்கு உதவியவர்களை வழக்கில் சேர்க்கவில்லை என்று வினோதினியின் பெற்றோர் கூறியுள்ளனர். அவர்களது இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் கொண்டு சுரேஷிற்கு உதவிய அவரது நண்பர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களையும் இவ்வழக்கில் சேர்த்து, அனைவருக்கும் படிப்பினை தரத்தக்க வகையில் மிகக்கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக