puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 27 பிப்ரவரி, 2013

2-வது டைட்டானிக் கப்பல் - 2016 பயணம்



2-வது டைட்டானிக் கப்பல் - 2016 பயணம்


February 27, 2013  04:33 pm
அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ´கிளிவே பால்மர்´. 895 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் இவர், 1912-ம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போன்ற புதிய கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 


 
 நேற்று நியூயார்க் நகரத்திலுள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்தார். இந்த கப்பல் கட்டும் பணி சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இது 2016-ம் ஆண்டு இது முடிவடைந்து பயணிகள் இதில் பயணத்தை மேற்கொள்ளாம் என்றும் அவர் கூறினார்.

 இந்தக் கப்பலின் முதல் பயணத்தின் டிக்கெட்டுகளை வாங்க 40 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். டைட்டானிக் கப்பலைப் போலவே இந்த புதிய கப்பலும் இங்கிலாத்தில் உள்ள சவுதாம்ப்டன் என்ற பகுதியிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வரை முதல் பயணத்தை மேற்கொள்ளும்.

இந்த கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் 1912-ம் ஆண்டில் இருந்த   பழைய பாணி உடைகளை அணிவார்கள். அவர்களுக்கு டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட அதேவிதமான உணவுகளே பரிமாறப்படும்.
´டைட்டானிக்-கப்பலை உருவாக்கும் பின்லாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர் கூறுகையில், இதுவே உலகின் மிகப் பாதுகாப்பான கப்பலாக இருக்கும்.´ என்றார்.
1912-ம் வருடம் ஏப்ரல் 15-ம் திகதி டைடானிக் கப்பல் 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்த பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 700 பேர் மட்டுமே உயிர் தப்பித்தனர். இந்த விபத்தே கடல் பயண வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாகும்

./thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக