.
பதிவு செய்த நாள் -
ஜனவரி 20, 2013 at 5:02:13 PM
சுஷில்குமார் ஷிண்டேவின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், இது உள்துறை அமைச்சரின் பொறுப்பற்றத் தன்மையை காட்டுவதாக கூறியுள்ளார்.
இந்து பயங்கரவாதம் என அவர் குறிப்பிட்டிருப்பது வேதனை அளிப்பதாவும், இந்த கருத்துக்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முக்தர் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தனது கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுஷில்குமார் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார். இந்து தீவிரவாதம் என தாம் கூறவில்லை என்றும், காவித் தீவிரவாதம் என்றே தாம் குறிப்பிட்டதாகவும் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.
/puthiyathalaimurai.tv thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக