புதுடெல்லி: இனிவரும் காலங்களில் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் கே.பர்தேஷி செய்தியாளர்களிடம் கூறும்போது இடைத் தரகர்களின் தலையீட்டை முற்றிலும் தடுக்க, பாஸ்போர்ட் கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்தும் புதிய முறை அடுத்த இரண்டு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் நேரத்தை ஆன்-லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்வதில் இடைத்தரகர்களின் தலையீடு இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த புதிய முறை மூலம், கடன் அட்டை மற்றும் இணையதள வங்கிச் சேவைகள் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போதே அதற்கான கட்டணத்தையும் செலுத்திவிட வேண்டும். தற்போது பாஸ்போர்ட் கட்டணத்தை அதன் அலுவலகங்களுக்கு சென்று செலுத்தும் நடைமுறை வழக்கத்தில் உள்ள நிலையில் இது மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்க கூடியதாகும்.
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் நேரத்தை ஆன்-லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்வதில் இடைத்தரகர்களின் தலையீடு இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த புதிய முறை மூலம், கடன் அட்டை மற்றும் இணையதள வங்கிச் சேவைகள் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போதே அதற்கான கட்டணத்தையும் செலுத்திவிட வேண்டும். தற்போது பாஸ்போர்ட் கட்டணத்தை அதன் அலுவலகங்களுக்கு சென்று செலுத்தும் நடைமுறை வழக்கத்தில் உள்ள நிலையில் இது மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்க கூடியதாகும்.
inneram. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக