puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 3 ஜனவரி, 2013

சிறுமிகளை கற்பழித்த நபருக்கு ஆண்மை நீக்கம்: தென் கொரியாவில் அதிரடி தீர்ப்பு

[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:08.35 பி.ப GMT ]
தென் கொரியாவில் சிறுமியை கற்பழித்த காம கொடூரனுக்கு ஆண்மை நீக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் பியோ என்ற குடும்ப பெயர் கொண்ட 31 வயது மதிக்கத்தக்க நபரொருவர், ஸ்மார்ட்போன் சட்டிங் மூலம் அறிமுகமான 5 சிறுமிகளுடன் தகாத முறையில் உறவு வைத்துள்ளார்.

அதன் பின்னர் அந்த சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்த போது, எடுத்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவதாகவும், வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட பியோ மீது சியோல் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி கிம் கி-யங் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.
அவர் தனது தீர்ப்பில், பியோ பல பெண்களை கற்பழித்துள்ளார். எனவே அவராகவே இந்த பாலியல் ஆசையை துறந்து திருந்துவார் என்பது சாத்தியமில்லை.
எனவே அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும், ரசாயன ஆண்மை நீக்கம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது.
சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர் 20 ஆண்டுகள் மின்னணு கண்காணிப்பு கொலுசு அணிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தென் கொரியாவில் குழந்தைகளை கற்பழிக்கும் குற்றத்திற்கு ஆண்மை நீக்கம் செய்யலாம் என்ற சட்டம் கடந்த 2011ஆம் ஆண்டுதான் அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக