puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 9 ஜனவரி, 2013

இனி செல்போனில் அதிக நேரம் பேசுவீர்களா ?



"செல்போன் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய பிரச்சனைகள் வருகின்றன" என்பது நாம் அறிந்தது. ஆனால் இது உண்மையா, அல்லது வெறும் சங்கதியா என்பதில் நமக்கு அய்யப்பாடு இருந்து வந்தது என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. தற்போது இது உண்மைதான் என்று உலக சுகாதார அமைப்பு தனது நெடுநாள் ஆய்வின் முடிவில் கூறியுள்ளது. 

"ரேடியோ பிரிகுவென்சி எலக்ட்ரோ மக்னடிக் பில்டு" [Radiofrequency electromagnetic field (EMF)]  - உங்களை செல்போனில் யாரேனும் அழைத்தவுடன் இந்த மின்காந்த பகுதி அந்த செல் போன் கருவியை சுற்றிலும் உருவாகி விடுகிறது. அது போல செல்போன் கோபுர இடத்திற்கு அருகே இந்த மின் காந்த பகுதி எப்போதும் சுழன்று கொண்டிருக்கிறது. அதாவது இதை மின்காந்த கதிரலை வீச்சு என்றும் சொல்லலாம். இந்தக் கதிர் வீச்சு மனிதர்களுக்கு மூளைப் புற்று நோய் மற்றும் மலட்டுத் தன்மை உள்ளிட்ட உடல் பிரச்சனைகள் பலவற்றை உருவாக்கலாம்  என்று உலகளவில் நடந்த மாநாட்டில் கூறப்பட்டது.

புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் உட்பட மொத்தம் பத்து நாடுகளை சேர்ந்த 29 ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்ட உலக மாநாடு ஒன்றில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாத முடிவில், செல்போனை முதல் சில நிமிடங்கள் பயன்படுத்தும் போது நமது உடலில் சில விளைவுகள் உடனடியாக நிகழ்கின்றன என்றும், செல்போன் கோபுரத்தின் அருகில் நிற்கும் போது இந்த காந்தக் கதிர் வீச்சுக்கு நமது உடல் முழுவதும் உட்படுகிறது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இது கொடுத்த அறிக்கையில், இப்படிப்பட்ட கதிர்வீச்சின் காரணமாக நமது உடலில் ஏற்படும் அபாய விளைவுகள், நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதால் அதிகரிக்கின்றன என்றும், இது நமது உடலின் இயல்பான போக்கில் மூக்கை நுழைக்கிறது என்றும், சேதமான DNA செல்களை நமது உடல் சரி செய்து கொள்வதை தடுக்கிறது என்றும், நமது உடலுக்கு இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறது.

செல்போன் கதிர் வீச்சின் காரணமாக ஆணின் விந்தணுக்கள் சேதமாகின்றன என்றும், இது செல்போனில் பேசுவதால் மட்டுமல்லாமல், செல்போனை இடுப்பில் அல்லது இடுப்பு கச்சையில் கட்டிக்கொண்டு இருக்கும் ஆண் மகனின் விந்தணுவை உடனடியாக குறி வைக்கின்றது என்றும், மேலும் கணினியை மடியில் வைத்துக் கொண்டு கம்பியில்லா இணையத்தில் (அதாவது Data Card) உலா வரும் ஆண் நண்பர்களை அதிகம் பதம் பார்க்கின்றது என்றும், இந்த அறிக்கையின் துணை ஆசிரியர் சிண்டி சகே குறிப்பிடுகிறார்.


இந்த ஆய்வில் கலந்து கொண்ட சுவிடன் ஓரிப்ரோ பல்கலைக்கழத்தை சேர்ந்த லேன்னர்ட் ஹர்டெல் என்ற  மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகையில், "செல்போன் பயன்படுத்தவதால், 'Glioma' (தீவிரமான மூளைக் கட்டி) என்ற நோய் ஏற்படுவதாகவும், 'Acoustic Neuroma' (காது மற்றும் மூளையை இணைக்கும் நரம்புகளில் மெல்ல வளரும் கட்டி) என்ற மற்றொரு நோய் மெல்ல உருவாவதாகவும்" கருத்துரைக்கிறார். மேலும், "தற்போது இருக்கும் போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை என்றும்" இவர் குறை கூறுகிறார்.

நமது இந்திய நாட்டைப் பொருத்த வரை, செல் போன் கோபுர கதிர் வீச்சு பரவும் எல்லை முன்பு 9.2 w/m2 ஆக இருந்தது. இது இந்த தொடர் உடல் ஆரோக்கிய பிரச்சனை காரணமாக 0.92 w/m2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. செல்போனை பயன்படுத்தும் போது கதிர் வீச்சை நமது உடல் இழுத்துக் கொள்ளும் அளவின் வீதம் 2 யூனிட்டிலிருந்து 1.6 watt per kg ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய தொலைதொடர்புத் துறையின் தொழில் நுட்ப ஆலோசகர் ஆர்.கே.பட்நகர் தெரிவித்துள்ளார். 



மேலும் செல்போனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து நமது தொலைத்தொடர்புத் துறை பொது மக்களுக்கு விடுத்த அறிக்கையில், (1) நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும். (2) செல்போனை நேரடியாக காதில் வைத்துக் கொள்வதை தவிர்த்து, 'headset' பயன்படுத்த வேண்டும், என்று கூறியுள்ளது. 

இதய நோய் உள்ளவர்கள் குறிப்பாக இதயத்தில் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ள நோயாளிகள் செல்போனை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று Dr Ashok Seth என்ற மருத்துவர் கூறுகின்றார்.

இனி செல்போனில் அதிக நேரம் பேசுவீர்களா ?
இடுப்புக்கு அருகே செல்போனை கட்டிக் கொள்வீர்களா?

sattaparvai thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக