puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 7 ஜனவரி, 2013

டெல்லி பாலியல் பலாத்கார வழக்கு : குற்றவாளிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்



டெல்லியில் கடந்த மாதம் இடம்பெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஐவர் இன்று டெல்லி சாகெத் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

 ஆறாவது நபர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதனால் சிறுவர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றன.

நீதிபதி நம்ரிதா அகர்வால் முன்னிலையில் ஏனைய ஐவரும் ஆஜர்படுத்தப்பட்ட போது, விசாரணையை அறிந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் நீதிமன்றம் முன்பு திரண்டனர். பத்திரிகையாலர்கள், வழக்கறிஞர்களும் நீதிமன்ற அறைக்குள் நுழைய முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. 30 பேர் மட்டுமே அமரக்கூடிய நீதிமன்ற அறைக்குள் அனைவரையும் அனுமதித்தல், பாதிப்புக்களை ஏற்படுத்தும் என கூறிய நீதிபதி, பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வீடியோவில் பதிவு செய்யும் படியும் உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணைகள் முடிந்ததும், அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் வியாழக்கிழமை வரவிருக்கிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மரணதண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக அரசுக்கு சார்பிலான சாட்சியங்களாக மாற சம்மதம் தெரிவித்துள்ளனர்.

4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக