puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த இயலாத பி.எஸ்.என்.எல் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அதிரடி திட்டம் ரெடி.


21  January  2013   
News at Tamilsource
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளது.பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிறுவனத்தின் வருவாயில், 48 சதவீதத்தை, ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிட வேண்டிய நிலை உள்ளது. இது, அந்த நிறுவனத்துக்கு, பெரும் சுமையாக உள்ளது.


எனவே, இந்த சுமையை குறைக்கும் வகையில், விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ஒரு லட்சம் ஊழியர்கள், தேவைக்கு அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.எனவே, இந்த கூடுதல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதன் மூலம், இவர்களுக்கான சம்பளத் தொகை, மீதமாகும் என, அதிகாரிகள் மதிப்பிட்டு உள்ளனர். ஒரு லட்சம் பேர், விருப்ப ஓய்வு பெற்றால், தற்போதுள்ள சம்பளச் சுமையில், 15 சதவீதம் வரை குறையும்.


இதன் பின்,நிறுவனத்தை, சுமுகமான முறையில் செயல்படுத்த முடியும். அளவுக்கு அதிகமான ஊழியர்களின் எண்ணிக்கையைத் தவிர, மேலும் ஒரு பிரச்னையும் உள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், தற்போது பணியாற்றும் ஊழியர்களின் சராசரி வயது, 50 ஆக உள்ளது. இதில், குறிப்பிட்ட சிலருக்கு, வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு, போதிய திறமை இல்லை.இவ்வாறு, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் தெரிவித்தன.

as

thedipaar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக