puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 16 ஜனவரி, 2013

கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் குக்கிராமத்தில் திடீரென பெருகும் அடிப்படை வசதிகள்




கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீராரின் குக்கிராமத்திற்கு திடிரேன அடிப்படை வசதிகள் அசுர வேகத்தில் செய்து கொடுக்கப்பட்டு வருவதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப் பட்ட வீரர்களில் ஒருவரான ஹேம்ராஜின் தலையை பாக் ராணுவம் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கொதிப்படைந்த ஹேம்ராஜின் குடுமபத்தினர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு, ஹேம்ராஜின் தலையை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹேம்ராஜின் சொந்த கிராமம் உத்தர பிரதேசத்தில் உள்ள கைராயர் கிராமமாகும். இந்த குக்கிராமம் டெல்லியில் இருந்து 160 கிலோ மீட்டர் தூரத்திலும், உ.பியின் மதுராவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் ஹேம்ராஜின் வீட்டுக்கு பல அரசியல் தலைவர்கள் அன்றாடம் ஆறுதல் சொல்ல சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனாலேயே இந்த குக்கிராமத்தின் அடிப்படை வசதிகள் அசுர வேகத்தில் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  கிராம மக்களே இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியப் படும் அளவிற்கு, சாலை, மற்றும் குடிநீர் வசதிகள், சுகாதார மேம்பாடுகள் என்று குக்கிராமமே அழகிய கிராமமாக மாறிவிட்டதாம். அதோடு ஆரம்பப் பள்ளி கூட இல்லாத அந்த கிராமத்தில் இன்னும் சில நாட்களில் ஆரம்பப் பள்ளிக் கட்டிடமும் திறக்கப்பட உள்ளதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக