பதிவு செய்த நாள் -
ஜனவரி 03, 2013 at 1:27:24
PM
சட்டவிரோத மருந்து பரிசோதனைகளை தடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக்கப்படும் மருந்து, மாத்திரைகளை நாடு
முழுவதும் பல மருத்துவமனைகள்,
நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அப்போது, அனுமதி பெறாத புதிய மருந்துகளை மக்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் செயல் கட்டுப்பாடின்றி நடைபெறுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனைகளின் இந்த நடவடிக்கை, நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய நீதிபதிகள், சுகாதாரத்துறை செயலாளர் கண்காணிப்பின்கீழ்தான் மருந்து பரிசோதனைகள் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டனர்.
சட்டவிரோதமாக நடைபெறும் புதிய மருந்து பரிசோதனைகளை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், சட்டவிரோத நடவடிக்கையை கண்டுகொள்ளாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்
.puthiyathalaimurai.tv thanks
நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அப்போது, அனுமதி பெறாத புதிய மருந்துகளை மக்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் செயல் கட்டுப்பாடின்றி நடைபெறுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனைகளின் இந்த நடவடிக்கை, நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய நீதிபதிகள், சுகாதாரத்துறை செயலாளர் கண்காணிப்பின்கீழ்தான் மருந்து பரிசோதனைகள் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டனர்.
சட்டவிரோதமாக நடைபெறும் புதிய மருந்து பரிசோதனைகளை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், சட்டவிரோத நடவடிக்கையை கண்டுகொள்ளாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்
.puthiyathalaimurai.tv thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக