puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 2 ஜனவரி, 2013

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் : குற்றவாளிகளுக்காக வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் முன்வரவில்லை?




டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதிடுவதற்காக எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை என  தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த டிச.29ம் திகதி 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.

13 நாள் போராட்டத்தின் பின்னர் குறித்த மாணவி உயிரிழந்தார். இந்நிலையில் குற்றவாளிகள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வழமையாக அச்சிட்ட வடிவில் தாக்கல் செய்யப்படும் இக்குற்றப்பத்திரிகை இம்முறை இரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக கணிணிவழி 1000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பிலான வழக்கை தினந்தோறும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் வழக்கு விசாரணைகள் ஒரு மாதத்தில் வழக்கு விசாரணைகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையிலேயே பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதாட முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக  யாரும் வாதாட கூடாது எனவும் நீதிமன்ற நீதிபதிகள் ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் இதுவரை வெளிவந்த தகவல்களின் படி குறித்த மாணவியை பேருந்திலிருந்து வீசிய பின்னர் பஸ் சக்கரத்தினால் அவரை ஏற்றிக்கொல்லப் பார்த்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் பஸ்ஸில் அப்பெண் தன்னை பலவந்தப்படுத்திய 3 பேரை எதிர்த்து கடுமையாக போராடியுள்ளதும், அப்போது அவர்களை கடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளின் உடம்பில் இருந்த காயங்களின் படி இது நிரூபனமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது மாணவியையும், அவரது நண்பரையும் இரும்புக்கம்பியால் குற்றவாளிகள் கடுமையாக தாக்கி அதன் பின்னரே அவர்கள் இருவரும் மயக்கமடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக