puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 18 ஜனவரி, 2013

ஜார்க்கண்டில் குடியரசு தலைவர் ஆட்சி மீண்டும் அமலுக்கு வந்தது!




ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி மூன்றாவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னர் அங்கு ஆட்சி புரிந்த பாரதிய ஜனதா மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் கூட்டணி ஆட்சி சில தினங்களுக்கு முன்னர் ஆட்டம் கண்டிருந்தது. ஆட்சி பொறுப்பை தங்களுக்கு தரவேண்டும் என கோரிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அது நடக்காததால் பாஜகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கியது.

இதனால் கடந்த ஜனவரி 8ம் திகதி ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து சட்டசபையை கலைக்குமாறு முதலமைச்சராக இருந்த அர்ஜுண் முண்டா கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஆளுனர் சையது அகமது நிராகரித்து விட்டதால், முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே மாற்று அரசு அமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாததை தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரி ஆளுனர் சையது அகமது மத்திய அர்சுக்கு பரிந்துரை செய்தார்.

இதை கடந்த ஒரு வார காலமாக பரீசிலனை செய்து வந்த மத்திய அரசு, தற்போது குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அங்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை மாநில சட்டசபை இடைநீக்கம் செய்து வைக்கட்டிருக்கும்.

கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவில் புதிய மாநிலமாக உருவான ஜார்க்கண்டில், 82 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபை உள்ளது. அங்கு இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிகளுமே பெரும்பான்மையாக எவரும் வெற்றி பெறவில்லை. இதனால் கடந்த 12 ஆண்டுகளில் அம்மாநிலத்தில் இரு முறை குடியரசு தலைவர் ஆட்சி நிலவியது. தற்போது மூன்றாவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜார்க்கண்ட் ஆளுனரின் ஆலோசகர்களாக, மத்திய உள்துறை முன்னாள் செயலர் மதுக்கர் குப்தா, மத்திய ரிசர்வ் காவல்துறை படையின் முன்னாள் டி.ஜி.பி விஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக