puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 11 ஜனவரி, 2013

கள்ளகாதலனுடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்: உயிருக்கு போராடும் 8வயது சிறுவன்

[ வெள்ளிக்கிழமை, 11 சனவரி 2013, 07:54.03 AM GMT +05:30 ]
ஆந்திராவில் கள்ள காதலனுடன் சேர்ந்து எட்டு வயது மகனுக்கு சூடு போட்ட கொடூர தாய்க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள வேட்டபாளையம் என்ற இடத்தை சேர்ந்த சுபானி, நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இவர் மனைவி ஆஷா. இவருக்கு எட்டு வயதில் மகன் இருக்கிறான். கணவர் இறந்த பிறகு, மகனை தன் தாய் வீட்டில் விட்டுள்ள ஆஷா, அருண்குமார் என்பவருடன் சேர்ந்து வாழ்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன் விடுமுறைக்காக தாயை பார்க்க சிறுவன் வந்தான். அப்போது அருண்குமார் வைத்திருந்த பணத்தை காணவில்லை, சிறுவன் தான் திருடி விட்டான் என அவர்கள் இருவரும் அவனை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
மறைத்து வைத்துள்ள பணத்தை எடுத்து தர வேண்டும் என கூறி கடுமையாக சித்ரவதை செய்த அவர்கள், சிறுவனுக்கு உடல் முழுக்க சூடு போட்டு அறை ஒன்றில் அடைத்தனர்.
இதனையடுத்து பக்கத்து வீட்டில் இருப்பவர்கள சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, உடல் முழுவதும் 20 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
உறவினர்கள் அளித்த புகாரை அடுத்து, சிறுவனின் தாய் ஆஷா, கள்ள காதலன் அருண்குமார் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


.newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக