puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 21 ஜனவரி, 2013

அல்ஜீரியாவில் கண்டெடுக்கப்பட்ட 25 உடல்கள் தீவிரவாதிகளா? பணயக் கைதிகளா?



on 21 January 2013.
அல்ஜீரியாவில் சஹாரா பாலைவனத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில், நடைபெற்ற பணயக் கைதிகள் விவகாரத்தில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில், தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்பதற்காக சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையின்போது..., 

மேலும் உடல்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், இதுவரை கிடைத்துள்ள உடல்களின், (தீவிரவாதிகள், பணயக்கைதிகள் சேர்த்து மொத்தமாக) எண்ணிக்கை, 55 இலிருந்து, 81-க்கு எகிறியுள்ளது என இன்று காலை அறிவிக்கப்பட்டது. இப்போது மற்றொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையின் ஒதுக்குப் புறமான பகுதியில் கிடைத்துள்ள 25 உடல்கள் யாருடையவை என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் உள்ளன.

 

காரணம், வெடிகுண்டு வெடித்த நிலையில் அந்த உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் சேதமடைந்துள்ளன. அல்ஜீரியாவின் தகவல் துறை அமைச்சர் முகம்மட் சையத், “தற்போது கிடைத்துள்ள உடல்கள், பணயக் கைதிகளின் உடல்களாகவும் இருக்கலாம். தீவிரவாதிகளின் உடல்களாகவும் இருக்கலாம். இரண்டும் கலந்த நிலையிலும் இருக்கலாம்” என்கிறார்.


அத்துடன் இப்பகுதியில் இந்த 25 பேரையும் பலிவாங்கிய குண்டுவெடிப்பு, தீவிரவாதிகளால் வெடிக்க வைக்கப்பட்டதா, அல்லது அல்ஜீரிய ராணுவம் ஏவிய ஏவுகணை ஒன்றால் ஏற்பட்டதா என்பதுகூட இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த 25 பேரும், இன்று காலை அறிவிக்கப்பட்ட மொத்தம் 81 என்ற எண்ணிக்கையில் வருகிறதா, அல்லது இது தனியா என்பதுகூட தெளிவாக இல்லை.

eutamilar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக