ஜக்கார்த்தா, ஜனவரி 18-
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர்
உயிரிழந்துள்ளனர். 18,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு
மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் ஆண்டுதோறும்
மழைக்காலங்களில் வெள்ளம் கரைப்புரண்டோடும். இவ்வாண்டு, வழக்கத்திற்கு மாறாக
ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனிடையே ஜக்கார்த்தாவில் 50 செ.மீ
உயரத்திற்கு தேங்கியுள்ள வெள்ள நீரில் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள்
பாதிப்படைந்துள்ளன. இந்த வெள்ள நீர் அந்நாட்டு அதிபர் மாளிகையையும் விட்டு
வைக்கவில்லை. நேற்று வியாழக்கிழமை மரியாதை நிமித்தமாக இந்தோனேசியா வந்தடைந்த
அர்ஜெண்டினா அதிபரை, இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங் யூடோயுனோ முழங்கால் அளவு
நீரில் நின்றபடி வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக