puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 9 ஜூன், 2013

பாலியல் தொல்லை தந்த மாமனாரின் இரு கைகளையும் வெட்டித் துண்டித்த மருமகள்கள்

[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 04:20.13 PM GMT +05:30 ]
பீகார் மாநிலம், ரோடாஸ் மாவட்டம் பனாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ராதே ஷியாம் சிங் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மருமகள்களுக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்து வந்தார்.
இதனை இவர் தனது பொழுதுப் போக்காக செய்து வந்துள்ளார். குடும்ப கௌரவம் போய்விடக் கூடாதே என்ற எண்ணத்தில் அவரை கண்டித்து, மன்னித்து விட்ட மருமகள்கள் மாமனாரின் மன்மத லீலையைப் பற்றி வேறு யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளனர்.

இதனால் ராதே ஷியாமிற்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. அவரது அத்துமீறல் எல்லைமீறி தொடர்ந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சமையலறையில் சின்ன மருமகள் காய்கறி நறுக்கி கொண்டிருந்த போது, பின்புறத்தில் அவரை கட்டிப்பிடித்து களியாட்டத்தில் ஈடுபட முனைந்துள்ளார்.

அந்த பெண் சத்தம் போடவே பக்கத்து அறையில் இருந்த மற்றொரு மருமகள் ஓடிவந்து, சின்ன மருமகளை காப்பாற்றி, மாமனாரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

சற்று நேரத்திற்கு பின்னர், போதை தலைக்கேறிய நிலையில் தன்னை எச்சரித்து அனுப்பி வைத்த இன்னொரு மருமகளை மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்தார்.

"இந்த கிழம் இனியும் திருந்த வாய்ப்பே இல்லை" என தீர்மானித்த மருமகள்கள் இருவரும் வீட்டில் இருந்த வெட்டுக் கத்தியால் ராதே ஷியாமின் இரு கைகளையும் வெட்டித் துண்டித்தனர்.

அவர் ரோடாஸ் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது வாரணாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருமகள்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக