puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 3 ஜூன், 2013

செவ்வாய் கிரகத்தில் புற்றுநோயை ஏற்படுத்தும் கதிர்வீச்சு

செவ்வாய் கிரகத்தில் புற்றுநோயை ஏற்படுத்தும் கதிர்வீச்சு
June 3, 2013  05:19 pm
செவ்வாய் கிரகத்தில்மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பில்லாத புற்றுநோயை உண்டாக்கும் கதிர்வீச்சு இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவேநடை பெற்று வரும் ஆய்வுகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆறுகளும்,ஓடைகளும் இருப்பது உறுதியாகியுள்ளன. இந்தநிலையில்செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள என்டீவர் விண்கலத்தை நாசா அனுப்பியது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்செவ்வாயில் தரை இறங்கியது எண்டீவர்´. செவ்வாய் கிரகத்தில் மேற்கொண்ட ஆய்வில்அங்கு பாறைகள் இருப்பதை உறுதி செய்தது. பூமிக்கு அனுப்பிய புகைப்படங்களில் பாறைகள் மற்றும் மண் மாதிரிகள் காணப்பட்டன.

செவ்வாய் கிரகத்தில் நிலவும் தட்பவெப்பநிலை குறித்துதற்போது ஆய்வு செய்து வருகிறது எண்டீவர். ஏற்கனவேசெவ்வாயில் தண்ணீர் இருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டென்னீஸ் பல்கலைக் கழகத்தின் பூமி மற்றும் கோள்கள் அறிவியல் துறை பேராசிரியர் லிண்டா ஹா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு என்டீவர் விண்கலம் வெட்டி எடுத்த பாறைகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில்அந்த பாறைகள் கூழாங்கற்களால் ஆனவையாக இருந்தன.

அவற்றில் பெரும்பாலானவை உருண்டை வடிவத்தில் உள்ளதும் தெரிய வந்தது. பாறைகள் ஒன்றோடொன்று ஒட்டிகான்கிரீட் போன்று இறுகி கிடக்கின்றன.

இந்த கூழாங்கற்கள் பாறைகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் மற்றும் ஓடைகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இப்பாறைகள் செவ்வாய் கிரகத்தில் பல கிலோ மீட்டர் தூரம் பரவி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

2030-ல் விஞ்ஞானிகளை அனுப்பி செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவும்,சுற்றுலாப் பயணிகளை அனுப்ப தனியார் நிறுவனம் ஒன்றும், திட்டமிட்டுள்ள வேளையில்,விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள இத்தகவலால் செவ்வாயில் மனிதன் வாழ்வது சாத்தியமே இல்லை என்று தெரியவந்துள்ளது.

50 சி.டி. ஸ்கேஸ் அளவுக்கு வெலிப்படும் கதிர்வீச்சால்புற்று நோய் உருவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த எட்டரை மாதங்களாக செவ்வாயில் ஆய்வு மேற்கொண்டு வரும் எண்டீவர் விண்கலமும் கதிவீச்சுக்கு தப்பவில்லையாம்.

thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக