puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 10 ஜூன், 2013

அங்கே மோடி இங்கே யாரு?


வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்த பா.ஜ.கவின் கட்சி மாநாடு கோவாவில் நடந்தேறியது. கட்சியின் தொண்டர்கள் மத்தியில் நரேந்திர மோடிக்கு பெரும் ஆதரவு இருப்பதையே அந்த மாநாடு காட்டியது. கோவா விமான தளத்திலிருந்து மாநாடு நடக்கும் கடற்கரை வரை வைக்கப்பட்ட மோடி கட் அவுட்டுகள் இதை கட்டியம் கூறின.

கட்சியின் மூத்த தலைவரான அத்வானியின் நெடுநாளைய கனவு பிரதமராவது. ஆனால் அவரது நிராசையாக போய்விட்டது, அவர் வளர்த்த அருண் ஜெயிட்லி அவரை முன்னிறுத்துவதில் தயக்கம் என்று தொடங்கி அத்வானியின் ஆசைக்கு குழிதோண்ட அராம்பித்தனர். கட்சியில் மோடி, அத்வானி, ஜெயிட்லி, சுஷ்மா என்று எல்லோருக்குமே பிரதமர் ஆசை கனவில் இருக்க ஒரு வழியாக கட்சி இப்பொழுது மோடியை தேர்தல் பிரச்சாரக் குழுத்தலைவர் பதவி என்று அறிவித்து அடுத்த பிரதமர் வேட்பாளர் அவர்தான் என்று ஏறக்குறைய அறிவித்து விட்டனர்.

இன்னும் காங்கிரஸ் கட்சி தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. சிங்கு மட்டும் இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி தலைமைக்கு தயக்கம். (அம்மாவிற்கு தெரியாத பிள்ளையின் லட்சணம்). கட்சியில் பிரபலமாக அடிபடும் பெயர் ப. சிதம்பரம்தான். அதற்காகத்தான் மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக ஆக்கப்பட்டார். சிதம்பரம் பிரதமர் என்று காங்கிரஸ் முன்னிறுத்தும் என்றால் தமிழக அரசியல் வியூகம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


மூன்றாவது அணியில் முலாயம் சிங்க் யாதவ் பிரதமர் கனவில் இருக்கிறார். இரண்டு பிரதான கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மூன்றாவது அணி அமையுமேயானால் முலயம்  சிங்கோ அல்லது ஜெ. வோ பிரதமர் வேட்பாளராக வாய்ப்பு உள்ளது. ஆனால் போன முறை யார் பிரதமர் வேட்பாளர்? என்று முதலிலேயே சச்சரவு தொடங்கியதால் வண்டி கிளம்பும் முன்பே தடம் புரண்டது. இந்த முறை மூன்றாம் அணி என்ன ஆகும் என்பது தெரியாது. மூறாவது அணியில் திரினாமுல் காங்கிரஸ் அணியும் வருமேயானால் பிரச்சனைகளுக்கும் சச்சரவுகளுக்கும் குறை இருக்காது.

தமிழக இரண்டு பிரதான கட்சிகளும் எந்த பக்கம் வேண்டுமென்றாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சாயும் என்பதை தேசிய அரசியல்கட்சிகள் நன்றாகவே கணித்து வைத்துள்ளனர். மேலும் இது ஒன்றும் நமக்கு தெரியாதது அல்ல. இரண்டு கழகங்களுமே தங்களது நிலைமையையும் ஆதாயத்தையும் முன்னிறுத்தியே செயல்படும்.


தமிகழ்கத்தில் உள்ள மற்றைய சில்லறை கட்சிகள் ஒன்றும் சாதிக்கப்போவது இல்லை. இரு பிரதான கழகங்களுக்கும் முட்டு கொடுத்து பின்பு எட்டி உதைக்கப்பட்டுவிடும்.

இனி குத்தாட்டம், தப்பாட்டம் எல்லாம் தொடங்கும், நடக்கும் கூத்தை வேடிக்கை பார்ப்போம்.

kummacchionline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக