June 9, 2013 03:12 pm
இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டுத் திருமணாத்தில் கலந்து கொண்ட 350 மணப்பெண்களுக்கு கன்னித்தன்மை மற்றும் கர்ப்பப்பை சோதனை நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பெடுல் மாவட்டம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அங்கு நேற்று முந்தினம், ´முக்கிய அமைச்சர்கள் கன்யாதான் யோஜனா´திட்டத்தின் கீழ் கூட்டுத்திருமணம் நடைபெற்றது.
அத்ஹில் கலந்து கொள்ள வந்திருந்த 350 பெண்களுக்கு கன்னித்தன்மை மற்றும் கர்ப்பப்பை தொடர்பான சோதனைகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
350 மணப் பெண்களில் 90 பேர் பழங்குடியினப் பெண்கள் என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் மணப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த சோதனைகளால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகளிர் அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி ஏந்தியுள்ளனர்.
யார் இந்த சோதனைகளுக்கு உத்தரவிட்ட அரசு அதிகாரி மற்றும் எதற்காக சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும் படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக