உலகெங்கும் பரந்து வாழும் பல்வேறு விசித்திர மனிதர்கள் பற்றிய ஏராளமான செய்திகளை எமது தளத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள். தினமும் உலகில் விசித்திரங்களுக்கு குறைவில்லை. இவற்றை உங்களுக்கு முந்திக்கொண்டு தருவதில் முன் நிற்கும் எமது தளத்தில் இன்று நீங்கள் பார்க்கப்போகும் விசித்திர பிறவி ஒரு சிறுவன். . பொதுவாக விசித்திரங்களுக்கு சீனா பின்நிற்பதில்லை. காரணம் சீனா எப்படி சனத்தொகையில் முதலிடம் பிடித்திருக்கிறதோ அது போன்று குறைபாடுகளுடன் பிறக்கும் மனிதர்களும் ஏராளம். இந்தவகையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச ஊடகங்களில் பெரிதும் இடம்பிடித்த சீனாவின் விசித்திர சிறுவன் ஒருவன் பற்றிய செய்தி தொகுப்பையே இன்று உங்களுக்காக தரப்போகிறோம்.
Maimaiti Hali எனப்படும் 8 வயது (2010 இல்) வயது நிரம்பிய சிறுவனின் முதுகில் ஆமை ஓடு போன்று விகாரமான ஒரு அமைப்பு அமையப்பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இச்சிறுவன் ஆமை சிறுவன் என்று அழைக்கப்பட்டான். இது பற்றி கருத்து தெரிவித்த இவனது தந்தை சிறுவனுக்கு சிறிய வயது என்பதால் ஆரம்பத்தில் அறுவைச்சிகிச்சை செய்ய டாக்டர்கள் அனுதிக்கவில்லை. எனினும் தற்போது சிறுவனுக்கு 8 வயதாகிவிட்டது. இதனை அகற்ற முடிவு செய்துள்ளோம். மற்றும் சிறுவன் மிகவும் தைரியமாக இருக்கிறான். வெளியில் செல்கின்ற போது ஏனைய சிறுவர்கள் இவனை பார்த்து கிண்டல் செய்கிறார்கள் . எனினும் அதைப்பற்றி எல்லாம் இவன் அலட்டிக்கொள்வதில்லை என்றார்.
சிறுவனுக்கு அறுவைச்சிகிச்சை செய்ய சீன இராணுவ மருத்துவமனை டாக்டர்கள் முன்வந்தார்கள். 2 மணி நேர போராட்டத்தின் பின்னர் சிறுவனின் முதுகில் இருந்தை ஆமை ஓடு அல்லது ஆமை முதுகு போன்ற அமைப்பினை அகற்றி சிறுவனையும் காப்பாற்றி மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். தற்போது சிறுவன் மிக்க சந்தோசக்கழிப்பில் இருக்கிறார்.. இனி இவன் ” ஆமை சிறுவன்” இல்லை… எல்லோரும் போல ஆரோக்கியமாக சிறுவன் அல்லவா.. வாழ்க வழமுடன்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக