puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 6 மே, 2013

மண்டபத்தில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போக்குவரத்து நிறுத்தம் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?



பனைக்குளம்,
மண்டபத்தில் சுற்றுலா பயணிகளுக்கான பைபர் படகு போக்குவரத்து நிறுத்தத்தால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

சுற்றுலா படகு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பூங்காவில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் சார்பாக சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த படகு கண்ணாடி இழை பைபர் படகு ஆகும்.
கடந்த 2 வருடத்திற்கு மேலாக இந்த படகு போக்குவரத்து நடைபெற்று வந்தது. ஒரு படகில் 8 பேர் செல்லலாம். நபர் ஒருவருக்கு ரூ.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் பலர் இந்த படகில் சென்று மண்டபம் கடல் பகுதியில் உள்ள அபூர்வ பவளப்பாறை களையும், பாம்பன் ரெயில்வே, ரோடு பாலத்தின் அழகையும் கடலுக்குள் சென்று பார்த்து ரசித்து வந்தனர்.
காட்சிப்பொருளானது
இந்த பைபர் படகுகள் கடந்த 2 வருடமாக தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு பைபர் படகு இயக்கப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் மாதத்துடன் டெண்டர் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 4 மாதத்திற்கு மேலாக மண்டபத்தில் சுற்றுலா பயணிகளுக்கான கண்ணாடி இழை பைபபர் படகு இயக்கப்படாமல் கடற்கரையிலேயே 3 படகும் காட்சி பொருளாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு படகில் கண்ணாடி முழுமையாக உடைந்து விட்டது. மற்ற 3 படகுகளும் பொலிவிழந்து காட்சியளிக்கிறது. கண்ணாடி இழை பைபர் படகு இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் கடற் கரை பூங்காவிற்கு வரக் கூடிய சுற்றுலா பயணிகள் படகில் செல்ல முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
கோரிக்கை
இது குறித்து பல முறை தெரிவித்தும் 4 மாதமாக இயக்கப்படாமல் மண்டபம் கடற்கரை பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கான பைபர் படகை இயக்குவதற்கு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை மற்றும் வனத்துறை அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் அரசு பணம் தான் வீணடிக்கப்பட்டு வருகின்றது.
எனவே மண்டபம் கடற்கரை பகுதியில் காட்சி பொருளாக நிற்கும் பைபர் படகுகளை சீரமைத்து சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில் அதனை இயக்க மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

dailythanthi thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக