சேலம்: மகாராஷ்டிராவில் இருந்து சேலத்துக்கு 49 மணி நேரத்தில் 1000 கிலோ மீட்டர் கடந்து வந்த புறாவின் உரிமையாளருக்கு சேலத்தில் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. சேலம் பந்தய புறா வளர்ப்போர் சங்கம் சார்பில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 9 பிரிவுகளில் புறா போட்டிகள்
நடத்தப்பட்டது. கர்நாடகா மாநிலம் சிந்தாமணி & சேலத்திற்கு 200 கிலோ மீட்டர், ஆந்திர மாநிலம் கதிரி&சேலம் 280 கிலோ மீட்டர், தாட்பத்ரி & சேலம் 370 கிலோ மீட்டர், கர்னூல்& சேலம் 470 கிலோ மீட்டர், மெகபூர்& சேலம் வழியாக 570 கிலோ மீட்டர், கம்மாரெட்டி&சேலம் 750 கிலோ மீட்டர், மகாராஷ்டிரா வார்தா & சேலம் 1000 கிலோ மீட்டர் தூரம் புறாக்களை பறக்க விடும் போட்டி நடந்தது.இதில் வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று சேலத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை புறா வளர்ப்போர் சங்க தலைவர் தனசிங் தலைமை வகித்தார். புறா பந்தய போட்டியில் முதலில் வந்த புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சேலம் புறா வளர்ப்பு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் சங்கர், பொருளாளர் முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் இருந்து சேலம் வரை (ஏர் ரூட்) 1000 கிலோ மீட்டர் தூரத்தை 49 மணி நேரத்தில் வேடிச்சி கவுண்டர் என்பவரின் புறா கடந்து முதலில் வந்து சாதனை படைத்தது. 110 மணி நேரத்தில் கடந்த நிலையில் கோபால் என்பவரின் புறா இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த சாதனை படைத்த புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
dinakaran thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக