puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 6 மே, 2013

கொடுக்கல்–வாங்கல் தகராறில் மிளகாய்ப்பொடி தூவி வாலிபரை கொலை செய்த 3 பேர் கைது



பனைக்குளம்,
கொடுக்கல்,வாங்கல் தகராறில் மிளகாய்பொடி தூவி வாலிபரை கொலை செய்த 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
கொலை
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குப்பான்வலசையை சேர்ந்த முத்து என்பவரின் மகன் முத்துச்சாமி என்ற அகமது (வயது36). இவர் கடந்த 28–ந் தேதி இரவு தனது உறவினர் ராஜா(25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாத்தாங்குளம் அருகே குண்டூரணி சாலையில் சிலர் மிளாகாய் பொடி தூவி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் கொடுக்கல்–வாங்கல் தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட முத்துச்சாமி கடந்த 2010–ம் ஆண்டு மதுரை வாடிப்பட்டி அருகே குழந்தைகள் அஸ்லம், அஜிதா ஆகியோருடன் கொலை செய்யப்பட்ட ஹாதிலாபானு வின் கணவர் என்பதும் தெரிந்தது. ஹாதிலாபானு இறந்துவிட்டதால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் சரண்யா என்ற பெண்ணை முத்துச்சாமி 2–வது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்துக்கு சரண்யாவின் தம்பி சதீஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்தாராம்.
கொடுக்கல்–வாங்கல் பிரச்சினை
இந்தநிலையில் முத்துச்சாமிக்கும் வாலாந்தரவை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் பாஸ் என்ற பாஸ்கரன்(28) என்பவருக்கும் கொடுக்கல்–வாங்கல் தகராறு இருந்துள்ளது. இதனால் பாஸ்கரனிடம் முத்துசாமி பணத்தைகேட்டு தொந்தரவு செய்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன், முத்துசாமியை கொலை செய்ய சரண்யாவின் தம்பி சதீசை பயன்படுத்தி திட்டம் தீட்டிஉள்ளார்.
இதைதொடர்ந்து பாஸ்கரன், சதீஷ், வாலாந்தரவையை சேர்ந்த ஜெகநாதன் மகன் ஜெயகிருஷ்ணா(28), கோபால் மகன் தினேஷ், அன்பழகன் மகன் அர்ச்சுனன் ஆகிய 5 பேரும் பணம் கொடுப்பதாக முத்துச்சாமியை சம்பவத்தன்று வரவழைத்து மிளகாய்பொடி தூவி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
3 பேர் கைது
இந்த நிலையில் முத்துச்சாமியின் புது மனைவி சரண்யா, தனது கணவன் கொலை செய்யப்பட்டது, அந்த கொலையில் தம்பிக்கு தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகம், போலீஸ் விசாரணை போன்ற பல பிரச்சினைகளால் மனம் உடைந்தார். இதனால் அவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே கேணிக்கரை போலீசார் சக்கரக்கோட்டை கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பாஸ்கரன், ஜெயகிருஷ்ணா, சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக தினேஷ், அர்ச்சுனன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட பாஸ் என்ற பாஸ்கரன் மீது ராமநாதபுரம், திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் 7 வழக்குகள் உள்ளன.

dailythanthi thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக