புதுடெல்லி, ஏப்ரல் 10:-
மலேசியாவின் குறைந்த பயணக்கட்டண விமான நிறுவனமான ஏர்-ஆசியா, இந்தியாவின் டாட்டா குழுமத்தினருடன் இணைந்து இந்தியாவில் உள்நாட்டு சேவைகளைத் தொடங்க இருக்கின்றது.
பொதுவாக, விமானப் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் உடைமைகளில் 20 கிலோ எடை வரை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். இதனை 15 கிலோவாகக் குறைக்க இந்திய விமான நிறுவனங்கள் விரும்பின. ஆயினும், இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளிக்காத நிலையில் இதனை செயல்படுத்த முடியவில்லை.
பயணிகள் முன்பதிவு செய்யும்போது விருப்ப இடஒதுக்கீட்டிற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் தொகை வசூலித்துக் கொண்டிருந்தன. சென்ற வருடம், இந்தத் தொகை உயர்வுக்கு ஆணையம் தடை விதித்ததால் உடைமைகளுக்கு கட்டணம் பெறுவது குறித்து இந்திய நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தன.
ஏர்-ஆசியா நிறுவனத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும்போதே, உடைமைகள் கட்டணமும் வசூலிக்கப்படுவதால், இந்தியாவிலும் இதே வழிமுறைகளை அவர்கள் பின்பற்றக்கூடும், அப்போது தாங்களும் பயனடையலாம் என்று இந்திய விமான நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
maalaimalar thanks
மலேசியாவின் குறைந்த பயணக்கட்டண விமான நிறுவனமான ஏர்-ஆசியா, இந்தியாவின் டாட்டா குழுமத்தினருடன் இணைந்து இந்தியாவில் உள்நாட்டு சேவைகளைத் தொடங்க இருக்கின்றது.
பொதுவாக, விமானப் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் உடைமைகளில் 20 கிலோ எடை வரை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். இதனை 15 கிலோவாகக் குறைக்க இந்திய விமான நிறுவனங்கள் விரும்பின. ஆயினும், இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளிக்காத நிலையில் இதனை செயல்படுத்த முடியவில்லை.
பயணிகள் முன்பதிவு செய்யும்போது விருப்ப இடஒதுக்கீட்டிற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் தொகை வசூலித்துக் கொண்டிருந்தன. சென்ற வருடம், இந்தத் தொகை உயர்வுக்கு ஆணையம் தடை விதித்ததால் உடைமைகளுக்கு கட்டணம் பெறுவது குறித்து இந்திய நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தன.
ஏர்-ஆசியா நிறுவனத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும்போதே, உடைமைகள் கட்டணமும் வசூலிக்கப்படுவதால், இந்தியாவிலும் இதே வழிமுறைகளை அவர்கள் பின்பற்றக்கூடும், அப்போது தாங்களும் பயனடையலாம் என்று இந்திய விமான நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக