puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

ராமநாதபுரம் நகரில் மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது 4 வாகனங்கள் பறிமுதல்



ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்த னர். அவரிடம் இருந்து 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருட்டு
ராமநாதபுரம் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகள், கடை கள் மற்றும் சாலையோரங்க ளில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த மோட்டார் சைக்கிள்கள் மர்மமான முறையில் திருடு போய் வந்தன. இரவு நேரங் கள் மட்டுமல்லாது பகல் நேரத்திலும் ஆள்நடமாட்டம் மிகுந்த இடங்களிலும் கூட இத்தகைய திருட்டு சம்பவங் கள் அதிகரித்து வந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிய டைந்தனர்.

இதைத்தொடர்ந்து ராமநா தபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோரது உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப் பிரண்டு முரளிதரன் மேற்பார் வையில் பஜார் இன்ஸ்பெக் டர் கணேசன், சப்இன்ஸ் பெக்டர் கணேசலிங்க பாண் டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸ் அமைக் கப்பட்டது. இந்த படையினர் ராமநாதபுரம் நகர் முழுவதும் தீவிர ரோந்து சுற்றி மோட் டார் சைக்கிள் திருட்டு குறித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
மோட்டார் சைக்கிள்கள்
இந்த நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் அரண் மனை பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டது டன், அதில் வந்த வாலிபரிட மும் விசாரணை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் தங் கப்பா நகர் பகு தியை சேர்ந்த துரைராஜ் மகன் கார்த்திக்(வயது 27) என்பவர் நகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளது தெரியவந் தது.
மேலும் அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் முதுகு ளத்தூர் அருகே உள்ள கோழிக் குளம் பகுதியை சேர்ந்த செந் தூரான் என்பவரது மகன் முத்துக்குமாருக்கு சொந்தமா னது என்றும், அவர் ராமநா தபுரம் சிகில்ராஜ வீதியில் ஒரு ஓட்டல் முன்பு தனது மோட் டார் சைக்கிளை நிறுத்தி சென்றபோது கார்த்திக் அதனை திருடியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திக்கிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தியதில், சூரங் கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார், லாந்தை சுலைமான், பாரதிநகர் பிரபு ஆகியோரது மோட்டார்சைக் கிள்களை திருடி முதுகுளத்தூர் அருகே உள்ள கீழ முந்தல் கிரா மத்தில் தனது மனைவி ஆறு முகக்கனி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாககூறினார்.
கைது
கொத்தனார் வேலை பார்த்து வந்த கார்த்திக் தின மும் சம்பாதிக்கும் பணத்தை குடித்து விடுவதால் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கவ னிக்க பணத்தேவை ஏற்பட்டு இதுபோன்று மோட்டார் சைக்கிள்களை திருடி உள்ள தும், இதனை நல்ல விலை கிடைக்கும் போது விற்க முடிவு செய்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீ சார் வழக்கு பதிந்து கார்த் திக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

dailythanthi. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக