puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 9 மார்ச், 2013

அமெரிக்க தீர்மானம் பிரிவினை சக்திகளுக்கு வெற்றியளிக்க கூடாது : சுப்பிரமணியசாமி



அமெரிக்கா விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கை சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் ஒரு மணிநேரம் பிளேக்குடன் உரையாடிய சுப்பிரமணியசுவாமி, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடர்பில் இலங்கையுடன் ஒபாமா நிர்வாகம் பேச்சுநடத்தி இணக்கம் காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த பிரேரணை வி.புலிகளுக்கு ஆதரவான பிரிவினை சக்திகளுக்கு வெற்றியாக அமைந்துவிடக்கூடாது எனவும், இதன் மூலம் வி.புலிகள் மீள் எழுச்சி பெறக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மனித உரிமை மீறல்கள் குறித்த எந்தவொரு விசாரணையும் இலங்கையின் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசே மேற்கொள்ள வேண்டும் எனவும், எந்தவொரு அனைத்துலக குழுவும் அதை மேற்கொள்ள கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தை தனக்கு திருப்தியளித்துள்ளதாகவும், இலங்கை தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கும் பிரேரணை எதையும் அமெரிக்கா முன்வைக்காது என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கைக்கு சென்றிருந்த சுப்பிரமணியசுவாமி அங்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் தனிப்பட்ட வகையில் சந்தித்து பேசியிருந்தார்.

ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட தமிழின உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சுப்பிரமணியசாமியின் இந்நடவடிக்கை அங்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக