puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 4 மார்ச், 2013

ராஜபக்சவை உலகம் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்' : கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு



இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி, தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தின் முன்பு, ஒரு சமூக ஆர்வலர் தீக்குளித்துள்ளார்.

 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மணி என்பவரே இவ்வாறு தீக்குளித்துள்ளதுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று நண்பகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் கலனுடன் சென்ற அவர், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பியபடியே தமது உடலுக்கு தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்தோர் தீயை அணிஅத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் நிருபர்களிடம் பேசிய அவர், தனித்தமிழீழம் வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக இந்த உலகம் அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என்றார். மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிதி கிடைக்காமல் ஊழல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து விட்டனர். இதனால் ஊழலற்ற இந்தியா மலர வேண்டும். அன்னா ஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரது வலுவான லோக்பால் மசோதா கோரிக்கை நிறைவேறவும் எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார். கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு நாம் தமிழர் கட்சியினர் உடனிருந்து சிகிச்சைகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

2009 இல் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருந்த போது உடனடியாக யுத்தத்தை நிறுத்தக்கோரியும், அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்தக்கோரியும் தமிழகத்தில் தொடர்ச்சியான தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. அந்நிலை தற்போது மீண்டும் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகரித்திருப்பதாக தமிழின உணர்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நன்றி : GTN

4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக