திருநெல்வேலி பஸ் நிலையத்தில் இருந்து புளியங்குடிக்கு அரசு பஸ் ஒன்று இன்று மாலை புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ் அபிஷேகப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பஸ்சில் ஏறி ஒரு பெண்ணை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
படுகாயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த பெண்ணின் பெயர் இசக்கியம்மாள் என தெரிய வந்துள்ளது. அவர் தன் இரு குழந்தைகளுடன் பஸ்சில் வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்தவர் அவரது கணவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். எனவே அவரது கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக