puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 2 மார்ச், 2013

கச்சத்தீவுக்கு செல்ல முற்பட்ட


கச்சத்தீவுக்கு செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

March 2, 2013  04:43 pm
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தாக்குதல் நீடித்தே வருகிறது.

இந்த நிலைக்கு காரணம், கச்சத்தீவு, இலங்கைக்கு கொடுக்கப்பட்டதுதான் என குற்றம்சாட்டும் மக்கள் விடுதலை கட்சியினர் அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்தனர்.

இதற்காக, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலை கட்சியினரும், ஆதிதமிழர் கட்சியினரும் இன்று (02) காலை ரயில் மூலம் ராமேசுவரம் வந்தனர். இதனால் அங்கு பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

மீனவர்கள் யாரும், போராட்டக்காரர்களுக்கு படகுகளை கொடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நீந்தி சென்றாவது கச்சத்தீவில் கொடியேற்றுவோம் என்று போராட்டக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் போராட்டத்திற்கு முருகவேல்ராஜன் தலைமையில் திரண்ட கட்சியினர் அக்னி தீர்த்த கடற்கரை நோக்கி சென்றனர். அங்கு அவர்களை பொலிஸார் தடுக்க முயன்றனர். இருப்பினும் 40-க்கும் மேற்பட்டோர் தடையை மீறி கடலுக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸார் விரைந்து சென்று கடலுக்குள் போராட்டம் நடத்தியவர்களை கரைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.  

/thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக