ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், தீவிர வசூல்வேட்டை நடப்பதால், நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், நவீன கருவிகள் மூலம் சிகிச்சை அளிப்பதால்,
நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதிய படுக்கை வசதி இல்லாததால், வாராண்டாவில் பாய் விரித்து படுக்கும் அவலம் நீடிக்கிறது.மேலும், டாக்டர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்தாலும், கீழ்மட்ட ஊழியர்கள், பணிவிடை செய்வதற்கு பணம் வசூலிப்பதை, அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. பிரசவ வார்டில் துவங்கி அனைத்து வார்டுகளிலும் இந்நிலை தான். நோயாளிகளை "ஸ்டிரெச்சரில்' கொண்டு வரும்போதே "கவனித்தால்' தான், வார்டில் படுக்கை வசதி கிடைக்கிறது. இல்லையேல், தரையில் படுக்க வைப்பது அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது. மேலும், எலும்பு முறிவு சிகிச்சை வார்டில் கை, கால், என, உறுப்பு வாரியாக கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர். இதனால், நோயாளிகள் எலும்பு முறிவை விட, "கவனிப்பு' வலியில் அதிகம் துடிக்கின்றனர். இதையெல்லாம் தவிர்க்க, மருத்துவத்துறை, "அதிரடி' காட்ட வேண்டும்
dinamalar thanks
நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதிய படுக்கை வசதி இல்லாததால், வாராண்டாவில் பாய் விரித்து படுக்கும் அவலம் நீடிக்கிறது.மேலும், டாக்டர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்தாலும், கீழ்மட்ட ஊழியர்கள், பணிவிடை செய்வதற்கு பணம் வசூலிப்பதை, அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. பிரசவ வார்டில் துவங்கி அனைத்து வார்டுகளிலும் இந்நிலை தான். நோயாளிகளை "ஸ்டிரெச்சரில்' கொண்டு வரும்போதே "கவனித்தால்' தான், வார்டில் படுக்கை வசதி கிடைக்கிறது. இல்லையேல், தரையில் படுக்க வைப்பது அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது. மேலும், எலும்பு முறிவு சிகிச்சை வார்டில் கை, கால், என, உறுப்பு வாரியாக கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர். இதனால், நோயாளிகள் எலும்பு முறிவை விட, "கவனிப்பு' வலியில் அதிகம் துடிக்கின்றனர். இதையெல்லாம் தவிர்க்க, மருத்துவத்துறை, "அதிரடி' காட்ட வேண்டும்
dinamalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக