வாணியம்பாடி: பணத்துக்காக மாணவனைக் கடத்தி கொலை செய்த அவரது
நண்பர்கள் 7
பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பூக்கடை பஜார் பகுதியை
சேர்ந்த பிளஸ் 2 மாணவர் மணீஷ் (வயது 17)
கடந்த மாதம் 23-ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து
வாணியம்பாடி டவுன் காவல்துறையிடம் மணீஷின் தந்தை ரமேஷ் புகார் செய்தார்.
காவல்துறையினர் வழக்கு பதிந்து மணீஷை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது தந்தைக்கு வந்த தொலைபேசி மிரட்டலின் பேரில் செல்போன் டவர் மூலம், எங்கிருந்து மிரட்டல் போன் வந்தது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். உடன் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வாணியம்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெகன் (21) என்பவரைக் கைது செய்து விசாரித்ததில், அவன் மணீஷின் நண்பன் என்பதும் மணிஷின் ஆடம்பரமான வாழ்க்கையை பார்த்து பணம் பறிக்க திட்டமிட்டு கடத்தி சென்றதாகவும். அது முடியாமல் போகவே மணீஷை கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டான். இவன் கொடுத்த தகவலில் அடிப்படையில்,இந்த கொலையில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த சிராஜ், லோகேஷ், அரவிந்தன், தரணி, மவுலிராஜன், ராயல் அகமது ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மாணவர் மணீஷை கொலை செய்து புதைத்தாக கைது செய்யப் பட்டவர்கள் கூறியதன் அடிப்படையில் புதைக்கப் பட்ட சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மாணவன் படுகொலை சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக