puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 4 மார்ச், 2013

சபா விவகாரம்: 300 ஓய்வுபெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரிகள் மறியல்



சபா விவகாரம்: 300 ஓய்வுபெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரிகள் மறியல்


கோலாலம்பூர், 4 மார்ச்- சபாவில் ஊடுருவல்காரர்களின் முற்றுகை விவகாரத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் பக்காத்தான் கட்சியைச் சேர்ந்த தியான் சுவாவின் அர்த்தமற்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று தலைநகர் துகு நெகாராவில் சுமார் 300 பணிஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.

முன்னாள் போலீஸ் படைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் இதர அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த மறியலில் அவர்கள் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.
சபாவில் ஊடுருவல்காரர்கள் ஊடுருவியுள்ளதும் அதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்து வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் அரசியல் நாடகம் என தியான் சுவா கூறியிருந்தார். 
அந்த அடிப்படையற்ற குற்றஞ்சாட்டுக்காக அவர் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மறியலில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 vanakkammalaysia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக