puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 3 மார்ச், 2013

துபாயில் 300 இற்கு மேற்பட்ட இளம்பெண்கள் விபச்சாரத்தில்! விசாரிக்கும் கேரள ஐகோர்ட்!!

 மார்ச், 2013, ]
துபாயில் 300 இற்கு மேற்பட்ட
வேலை வாங்கித் தருவதாக கூறி, 300 இளம் பெண்களை, துபாய்க்கு அழைத்து சென்று, விபசாரத்தில் தள்ளியது தொடர்பாக, வெளியுறவு துறையிடம், கேரள ஐகோர்ட் விளக்கம்கேட்டுள்ளது.

கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த, இளம்பெண் ஒருவரை, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில், வீட்டு வேலையாள் பணிக்கு சேர்த்து விடுவதாகக் கூறி, சிலர் அழைத்துச் சென்றனர். அங்கு உறுதி அளித்தபடி, வேலை தராமல், விபசாரத்தில் தள்ளினர்.

எப்படியோ, விபசார கும்பலிடமிருந்து தப்பி, சொந்த ஊர் திரும்பிய அந்தப் பெண், தன்னைப் போல, துபாய் மற்றும் ஷார்ஜாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அழைத்துச் செல்லப்பட்ட, கேரளாவைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், விபசாரத்தில் தள்ளப்பட்டு, கொடுமை அனுபவிப்பதாக தெரிவித்தார்.

"அந்தப் பெண்களை விபசார கும்பலிடம் இருந்து மீட்டு, கேரளாவுக்கு அழைத்து வரும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, கேரள ஐகோர்ட்டில், அந்தப் பெண் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, கேரள ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான, கேரள உள்துறை முதன்மை செயலர் சாஜன் பீட்டர் கூறியதாவது:

அரபு நாடுகளில், சிக்கியுள்ள பெண்களின் பெயர்களோ, விலாசமோ எதுவும் இல்லை. அவர்களை சட்டத்திற்கு புறம்பான பணிகளில் ஈடுபடுத்தியுள்ள நபர்கள் குறித்தும், விவரங்கள் தரப்படவில்லை.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் மூலமாக, துபாயிலுள்ள, இந்திய துணை தூதரகத்தை, கேரள அரசு தொடர்பு கொண்டு பேசியுள்ளது.

துபாயில், கேரளாவைச் சேர்ந்த, 300 இளம் பெண்கள், விபசாரத்தில் தள்ளப்பட்டு, கொடுமை அனுபவித்து வருவதாக, கேரள நுண்ணறிவுப் பிரிவு, கூடுதல் டி.ஜி.பி.,க்கும், அனாமதேய கடிதம் ஒன்று வந்தது.

அதனடிப்படையில் நடத்திய விசாரணையிலும், முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனால், வெளிநாட்டில் உள்ள சிலரது தொலைபேசி எண்கள் மட்டும் கிடைத்தன. அதை வைத்து, விசாரணை நடத்த இயலாது என, துபாயிலுள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்து விட்டது.

இவ்வாறு சாஜன் பீட்டர் கூறினார்.

இதையடுத்து, "இந்தப் புகார்கள் தொடர்பாக, வெளியுறவு துறை, இதுவரை நடத்திய விசாரணை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.


viyapu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக