கோலாலம்பூர்,
மார்ச் 4- நாட்டில் சிறார் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே
வருகிறது.
அவ்வகையில்,
கடந்த ஆண்டு நாட்டில் சிறார் சித்ரவதை சம்பவங்கள் 17.8% விழுக்காடாக
அதிகரித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு 242-ஆக இருந்த சிறார் சித்ரவதை சம்பவங்கள்
கடந்த ஆண்டு 285-ஆக அதிகரித்துள்ளது.
சித்ரவதை
சம்பவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1-லிருந்து 7 வயதுக்குட்பட்ட
சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக அரச மலேசிய காவல் படையின், பாலியல்,
சித்ரவதை மற்றும் சிறார் பிரிவு இயக்குனர் ஏ.சி.பி ஹமீடா யூனோஸ் தெரிவித்தார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு 117-ஆக இருந்த இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டு 136-ஆக
அதிகரித்துள்ளது.
இதுதவிர 7
வயதுக்கும் மேற்பட்ட சிறார் சித்ரவதை சம்பவங்கள் 82லிருந்து 99-ஆக
அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஒரு வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறார் சித்ரவதை
சம்பவங்கள் 43-லிருந்து 50-ஆக அதிகரித்துள்ளது.
மேலும்,
மாநில ரீதியாக நிகழ்ந்த சிறார் சித்ரவதை சம்பவங்கள் பின்வருமாறு:
சிலாங்கூர்:
67
ஜொகூர் :
67
பினாங்கு:
25
நெகிரி
செம்பிலான்: 24
கோலாலம்பூர்:
18
சரவாக்:
15
மலாக்கா:
13
பேராக் :
12
கிளந்தான்:
10
சபா:
10
பஹாங் :
9
கெடா:
8
திரங்கானு:
4
பெர்லிஸ் :
3
vanakkammalaysia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக