on 11 February 2013.
இந்தியா
ஆதரிக்கும் மத்திய அரசாங்க அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னையில்
நேற்று செய்தியாளர்களிடம் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இந்த கருத்தை
வெளியிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கூட்டத்தொடர் அமர்வுகளின்
போது சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவினால் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதை
இந்தியா ஆதரித்தது.
மனிதஉரிமைகள்
தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள்
பேரவையில் மீளவும் அந்த நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்படும் எத்தகைய
தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும். மத்திய அரசு எப்போதும் சிறிலங்காவில் உள்ள
தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.
அவர்களுக்கு
ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தன உடன்பாட்டின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை,
இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்து வருகிறார். தமிழர்களுக்கு அதிகாரங்களைப்
பெற்றுக்கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. சில தமிழ்க்கட்சிகள்,
தமிழ்நாடு அரசாங்கம் போன்றன முன்யோசனையின்றி தீர்மானம் நிறைவேற்றியது போலன்றி,
இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது அதனால் தான்.
சிறிலங்கா
பிரச்சினையை இந்திய அரசு நாசூக்காகவே கையாள வேண்டிய தேவை உள்ளதாக நாராயணசாமி
தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கூறுவதுபோல், சிறிலங்கா மீது பொருளாதார தடை
விதித்து அவர்களை விரோதித்து கொண்டால், அங்குள்ள தமிழர்களுக்கு நம்மால் உதவி
செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக