puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

டெல்லி பாலியல் பலாத்காரம் : மாணவியின் குடும்பத்தினருக்கு வீடு மற்றும் அரசு வேலை!



சிங்கப்பூரில் மரணமடைந்த டெல்லி மாணவி குடும்பத்தினருக்கு வீடு மற்றும் அரசு வேலை கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க மாணவியின் தந்தை நேரம் கேட்டிருந்தார். இதையடுத்து நேற்று முன் தினம், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அம்மாணவியின் வீட்டுக்கு சென்று பெற்றோர் மற்றும் உறவினருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஒரு மணிநேரத்துக்கு மேல் அவர்களுடன் பேசியுள்ள சோனியா காந்தி, இறந்த மாணவியின் குழந்தை பருவம் மற்றும் அவரது திறமை ஆகியவற்றை பற்றி பரிவுடன் கேட்டறிந்துள்ளார்.

அம்மாணவியின் படித்த அறைக்கு சென்று அவர் உபயோகித்த புத்தககங்களையும் பார்வையிட்டுள்ளார்.  மேலும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு நிச்சயம் அவர்களது செயலுக்குரிய தண்டனை கிடைக்கும். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்கள் குடும்பத்தை எனது குடும்பமாகவே பார்க்கிறேன் என ஆறுதல் கூறியதுடன், துவாரகாவில் ஒரு வீடு வழங்கவும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதேவேளை இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றப்பதிவுகள் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. 13 பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது. அதிகபட்சமாக மரணதண்டனை வரை கிடைக்கப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆறுபேரில் ஆறாவது நபருக்கு இன்னமும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதனால் அவர் சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் தனியாக விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். அவருக்கு தண்டனைக்காலம் வெகுவாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக