puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 3 ஜூன், 2013

கிருஷ்ணகிரியில் பரபரப்பு பிளஸ் 2 மாணவி கொலை மாந்தோப்பில் உடல் மீட்பு

கிருஷ்ணகிரியில் பரபரப்பு பிளஸ் 2 மாணவி கொலை மாந்தோப்பில் உடல் மீட்பு

[ திங்கட்கிழமை, 03 யூன், 2013, ]
கிருஷ்ணகிரியில் பரபரப்பு
கிருஷ்ணகிரி அருகே பிளஸ் 2 மாணவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மாந்தோப்பில் கிடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள மோரமடுகு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. இவரது மகள் பவித்ரா (17). 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தார். இந்த ஆண்டு தேர்வு எழுதிய பவித்ரா, 960 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். 

நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் வீட்டில் பெற்றோருடன் பவித்ரா தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டில் அவரை காணவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் விசாரித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி,ராயக்கோட்டை சாலையில் உள்ள வேப்பாலப்பட்டி கிராமத்தில், பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இதை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், கிருஷ்ணகிரி டிஎஸ்பி சந்தானபாண்டியன் தலைமையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

விசாரணையில் சடலமாக கிடந்தது மாணவி பவித்ரா என்பது தெரியவந்தது. இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், பவித்ராவின் உடலை பார்த்து கதறியழுதனர். 

தகவல் அறிந்த மக்கள் அங்கு திரண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


viyapu.thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக