- Tuesday, 05 March 2013 08:14
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடந்த விவாதத்தின் போது, அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் அமைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் காலக்கூட்டத் தொடர் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது, அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான கேள்வி எழுந்தது. அப்போது பதில் அளித்து பேசிய, மத்திய நிதித்துறை இனை அமைச்சர் நமோ நாராயண் மீனா,
அரசு ஊழியர்களுக்கான 6வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் கடந்த 2006ம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ம் திகதி அமலுக்கு வந்துள்ள நிலையில், 7வது சம்பள கமிஷன் அமைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று வாசித்தார். மேலும், 7வது கமிஷன் அமைக்கும்படி பல கோரிக்கைகள் வந்து கொண்டு இருப்பதாகவும், ஆனால் ஒரு சம்பள கமிஷனுக்கும், மற்றொரு சம்பள கமிஷனுக்கும் இடையில் குறைந்தது 10 ஆண்டுகால இடைவெளி இருக்கவேண்டும் என்கிற நடைமுறையின் படி, தற்போதைக்கு 7வது சம்பள கமிஷன் அமைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் திட்டவட்டமாக, எழுத்துப் பூர்வமாக வாசித்து முடித்தார் அவர்.
அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் அமைக்கும் படிக் கேட்டுக் கொண்டு, சென்ற ஆண்டு அரசு ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கது. தற்போதைய நிலவரப்படி 50 லட்சம் அரசு ஊழியர்களும் 75 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக