Monday, 04 March 2013 10:36
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க சீனா மறுப்பு வெளியிட்டுள்ளது.
பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இக்கடனுதவி இலங்கை அரசினால் கோரப்பட்டிருந்தது. எனினும், அபிவிருத்தி திட்டங்களுக்கான கடனுதவியை மட்டுமே தம்மால் செய்ய முடியும் என சீனா கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் இலங்கையின் நிதி அமைச்சு தகவல் வெளியிடுகையில், சீன அரசினால், இலங்கைக்கு வழங்கப்படும் கடனுடதவிகள், இலங்கையின் பாரிய கட்டுமான பணிகளுக்கு மாத்திரமே பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றுக்கான கடன் வட்டியும் அதிகளவில் உள்ளன என தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அதிகளவில் வெளிநாட்டு கடனுதவி வழங்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை சீனாவிடமிருந்து பெற்றது. ஹம்பாதோட்டை துறைமுக கட்டுமான பணிகள், மாத்தல விமனாநிலையம், மொரகஹககந்த நீர்ப்பாசன திட்டம், நுரைச்சோலை அனல் மின் நிலைய திட்டம் என்பவற்றிற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
சமீபகாலமாக இலங்கையின் மொத்த கடன் வீதம் ரூ.6.610 பில்லியன் அளவு உயர்ந்துள்ளது. இவற்றில் 52% வீதம் உள்ளூர் அபிவிருத்தி பணிகளுக்கான கடனுதவி ஆகும்.
இப்பதிவுகளையும் பார்த்துச்செல்க :
- 'ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையும் ஆயுதம் தூக்குவதற்கு நாம் காரணமாகப் போகின்றோம் ' : ஜெனிவாவில் கெலம் மக்ரே
- 'ராஜபக்சவை உலகம் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்' : கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு
- மனித உரிமைகளுக்கான ஜெனிவா சர்வதேச திரைப்பட விழா : ஒரு பார்வை
- No Fire Zone ஆவணப்படத்தை உலகம் பார்க்க நீங்கள் என்ன செய்யலாம்?
4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக