puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

ஆப்கான் இராணுவத்தில் முதல்முறையாக பெண்களுக்கான சிறப்புப் படை


ஆப்கான் இராணுவத்தில் முதல்முறையாக பெண்களுக்கான சிறப்புப் படை


February 15, 2013  12:10 pm
ஆப்கானிஸ்தான் இராணுவம், முதல் முறையக பெண்களுக்கான சிறப்புப் படையை உருவாக்கி இராணுவப் பயிற்சி அளித்து வருகிறது.


ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் பல ஆண்டுகளாக பெண்கள் இடம்பெற்றுள்ள போதும், அவர்களுக்காக சிறப்பு படை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த கட்டுப்பாடுகளோடு உள்ள சமூகத்தில், இந்த மாற்றம் புதிய வளர்ச்சியாகும் என கருதப்படுகின்றது.

இந்தப் படையினருக்கு இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த பயிற்சிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அமெரிக்காவின் இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருவதால் ஏற்படும் இராணுவ வீரர்களின் பற்றாக்குறையை இவர்களைக் கொண்டு சரிகட்ட அரசு தீர்மானித்துள்ளது.

இரவு ரோந்துகள் மூலமே தலிபான்களின் கமாண்டர்களை பிடிக்க முடியும் என்று அமெரிக்கா கூறியது. எனவே இரவு  ரோந்துப் பணி மிகவும் முக்கியமானதாகும்.

ஆனால் இரவு ரோந்து நடத்தும்போது, வீடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை அமெரிக்க வீரர்கள் சோதனை இடுவதும், புனித நூலான குரானை தொடுவதும் கலாச்சார மீறலாகக் கருதப்படுகிறது.

எனவே இதனைத் தவிர்க்க, அமெரிக்கப் படைகளுடன் பெண்களின் சிறப்புப் படையும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக