- Friday, 18 January 2013 12:14
டெல்லி பலாத்கார சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 6வது குற்றவாளியின் வயது நிர்ணயம் தொடர்பான வழக்கில் வரும் 28 ஆம் திகதி தீர்ப்பளிக்கப் படும் என்று சிறுவர் நலன் நீதி மன்றம் அறிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் 16 ஆம் திகதி, ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பலாத்காரத்தில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதில் 6வது குற்றவாளி 18 வயது நிரம்பாத இளைஞன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அதோடு 6 குற்றவாளிகளில் மிகவும் கொடூரமான முறையில் மாணவியைத் தாக்கியதும் அந்த 6வது குற்றவ்காளிதான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் அவனது வயது குறைவு என்பதால் அவனுக்கு அதிக பட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்க முடியும். இதனால் அவனது வயதை உறுதி செய்ய எலும்பு ஆய்வு செய்யும் பரிசோதனைக்கும் முடிவு எடுக்கப் பட்டது.
ஆனால், சட்டப்படி பள்ளிச் சான்றிதழ் இல்லாத போதோ, அல்லது அது போலி என நிரூபிக்கப்பட்டாலோதான் இந்த வித சோதனைகள் செய்ய முடியும். இதுத் தொடர்பாக சிறுவர் நீதி மனறத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சிறுவன் படித்த பள்ளியின் தற்போதைய மற்றும் சிறுவன் படித்த காலத்தின் முந்தைய தலைமை ஆசிரியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதன்படி நேற்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். சிறுவனுக்கு வழங்கப்பட்ட கல்வி சான்றிதழின் மூல ஆவணங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பித்தார்கள். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வரும் 28 ஆம் திகதி வழங்கப்படும் தீர்ப்புக்குப் பின்னரே அக் குற்றவாளிக்கு எலும்புரு பரிசோதனை நடத்துவது குறித்து முடிவு செய்யப் படும்.
.4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக